யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல், என் உழைப்பு, கற்பனை மற்றும் வார்த்தைகளின் மீது கொண்ட நம்பிக்கையால் என் பயணத்தைத் தொடர்கிறேன். எனக்கு குடும்பம் என்று அழைக்க யாரும் இல்லை; என் வார்த்தைகளும் என் கவிதைகளுமே என் குடும்பம், என் உலகம்.
வாழ்க்கையில் தனியாக ஒரு லட்சியம் எனக்கு இல்லை. என் கற்பனைக்கு உயிர் கொடுக்கும் கவிதைகளே என் அடையாளம். மனித உணர்வுகளையும் வாழ்க்கை அனுபவங்களையும் வார்த்தைகளாக்கி உங்களிடம் கொண்டு சேர்ப்பதே என் மகிழ்ச்சி.
இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் என் அன்புடன் அர்ப்பணிக்கிறேன்.