மனதை அறிந்தால்
மனிதனை அறியலாம்...
வாழ்க்கையின் பல பரிமாணங்களை
மென்மையாக தொட்டு செல்லும்
கவிதைத் தொகுப்பு இந்நூல்.
பெற்றோர் அன்பு, உழைப்பின் பெருமை,
இயற்கையின் அற்புதம், சமூகத்தின் சிந்தனை,
உறவுகளின் நினைவுகள், மன உணர்வுகளின்
ஏற்றத் தாழ்வுகள்... இவை அனைத்தையும்
எளிய சொற்களில் ஆழமான உணர்வாக
வெளிப்படுத்தியுள்ளார் அய்யாவு.
அவர்களின் இந்தக் கவிதைகள்.
-
சில கவிதைகள் கேள்விகளை எழுப்பும்.
-
சில கவிதைகள் ஆறுதலாக இருக்கும்.
-
சில கவிதைகள் புதிதாய் உணரச் செய்யும்.
இந்தக் கவிதைகள் அனைத்தும்,
மனதை பார்த்து, மனிதனை அறிய
வழி காட்டும் ஒரு பயணம்.
"வாசிப்பது என்பது
சொற்களைப் படிப்பது அல்ல,
உள்ளத்தைத் தொட்டுச் செல்லும்
உணர்வுகளை அனுபவிப்பதே."