சக்தி சங்கமம் எனும் இப்புத்தகம், ஆதிபராசக்தி அவளாய் முடிவெடுத்து என்னை கருவியாக்கிய அனுபவம். மாதங்கி எனும் பெயரில் சிறுகதை ஒன்றை எழுதினேன். அந்த பெயரின் ஆளுமையில் என்னையறியாமல் என் மனதிற்கு நெருக்கமான நவராத்திரி கொண்டாட்டத்தை பற்றியும், அதன் பின்னணி பற்றியும் தெரிந்ததை பகிர்ந்து கொள்ள எடுத்த முயற்சியே இப்புத்தகம். இதன் காரணமாக தேவி பாகவதம் போன்ற நூல்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியம். என்னோடு அன்னை சக்தியை கொண்டாட, சக்தி சங்கமத்தில் சேர, அன்போடு அழைக்கிறேன். என் சிறு முயற்சியையும் பெறாத அன்னையாய் அருகிருந்து ஊக்குவித்து, பெருமிதம் கொள்ளும் கணவருக்கும், என் மகள்களுக்கும், வானுலகிலிருந்து ஆசீர்வதிக்கும் இருதரப்பு பெற்றோருக்கும், குருவிற்கும், இறைவனுக்கும், இப்புத்தகத்தை பதிப்பித்த திரு. ஜீத்து அவர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். அன்பின் வழியது உயிர்நிலை, ஆக்கும் சக்தியே அன்னை.
- கவிதா இராஜகோபாலன்